எழுத்தால் மாயம் புரிந்த வித்தகர்கள்...!

” எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ”

வள்ளுவன், கம்பன், இளங்கோ போன்ற தமிழ் மறையோர் கொடுத்த எழுத்தெல்லாம் கண்ணென தகும் தான். ஆயினும், திரைகடல் ஓடி திரவியம் தேடுவதைப்போல, திரைகடல் தாண்டி எழுதப்பட்டவைகளும் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியவை தான்.

அவ்வாறு, தன் எழுத்தால் சமூக மாற்றங்களை உருவாக்கி வாசித்தலின் இன்பத்தை ததும்ப ததும்ப தந்தவர்கள் நிறைய பேர். வாசிக்க தெரிந்த யாரும், இவர்களின் எழுத்துக்களை மட்டும் வாசிக்காமல் விட்டு விடக்கூடாது என்று ஒரு list எடுத்தால்..முன்னால் வந்து நிற்கும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் யார் ? 

யாரெல்லாம் அந்த listல் வருகிறார்கள்? ஏன் வருகிறார்கள் ? அப்படி என்ன பெரிதாக எழுதிக் கிழித்து விட்டார்கள் ?..வாருங்கள்..அலசலாம்....!

10. Franz Kafka (A.D 1883 - 1924)

1988ஆம் வருடம், 'The Trial' (விசாரணை) என்று பெயரிட்டு, ஜெர்மன் மொழியில் கையால் எழுதப்பட்ட சிறுகதையின் மூலப்பிரதி ஒன்று ஏலத்திற்கு வந்தது. 

ஏலத்தின் முடிவு தொகை எவ்வளவு தெரியுமா ? 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.  13.5 கோடி ரூபாய். 1988ல் 13.5 கோடி என்றால் இன்றைய மதிப்பு எவ்வளவு பெரும் ?

அந்த நேரத்தில், அதிக விலைக்கு வாங்கப்பட்ட கையால் எழுதப்பட்ட சிறுகதையின் மூலப்பிரதி இது தான். அதுவும் Franz Kafka இறந்து 65 வருடங்களுக்குப் பிறகு. (at that point the highest price ever paid for a modern manuscript) 

இன்றைய செக் குடியரசின் தலைநகர் Prague ல் பிறந்தாலும் ஜெர்மன் மொழியே தாய்மொழி ஆனதால், இவர் ஜெர்மானிய யூதராகவே அறியப்படுகிறார். 
 
படித்து முடித்து வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் தன்னை ஒரு எழுத்தாளனாகவே இவர் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் எழுதினார், நிறைய எழுதினார். என்ன...எழுதியது எல்லாமே கடிதங்கள். தாய்-தந்தைக்கு, நண்பர்களுக்கு, காதலி(களு)க்கு என்று கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவரை, கதைகள் எழுத ஊக்குவித்தது நண்பன் Max Brod. 

காரணம்...இவரின் எழுத்து நடை..உள்மன எண்ண அலைகளை வித்யாசமான நடையில் விவரிக்க தெரிந்த வித்தை. 

ஒரு புத்தகம் என்பது என்ன? Kafka இப்படி சொல்கிறார்: 'உறைந்து போன கடலின் உள்ளிருக்கும் கோடாரி'

தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தன்னை இப்படி வரையறுக்கிறார்: 'நான் சுதந்திரமானவன்..அதனாலேயே அடிக்கடி தொலைந்து போகிறேன்...!

தான் காதலித்த பெண்ணை இப்படி தான் அறிமுகப்படுத்துகிறார்:

'அவளை முதலில் பார்த்த போது, எனக்கு பெரிதாய் எந்த ஈர்ப்பும் இல்லை..கண் எதிரே காணக்கிடைகிறாள் என்று தான் பார்த்தேன்'

கதைகள் எழுத தொடங்கினாரே தவிர, பெரும்பாலான கதைகளை முடிக்கவே இல்லை. முடித்த கதைகளையும் புத்தகங்களாக ஆக்கவும் இல்லை. இளம் வயதிலேயே நோய்வாய் பட்டு எழுத்தாளன் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் இறந்தும் போனார். 

இவருடைய எழுத்துக்களை வெளிஉலகிற்கு கொண்டு வந்தது..நண்பன் Max Brod தான்.

1960ல், ஓவ்வொன்றாக  வெளி வரத்துவங்கிய இவரது கதைப் புத்தகங்கள் (மொத்தமே 18 தான்) ஜெர்மானிய இலக்கிய வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. குறிப்பாக, அதிகாரத்துவ கம்யூனிச அரசின் கைக்குள் இருந்த கிழக்கு ஐரோப்பாவில், வாசிப்பவர்கள் மத்தியில் Kafka தீ பரவியது. 

வித்யாசமான நக்கலும் நையாண்டியும் மிக்க இவரது வரிகள் தீவிரமான மேற்கோள்களாக கொள்ளப்பட்டன. ஆங்கில அகராதியில் 'Kafkaesque' என்ற புதிய வார்த்தையே உருவானது.

Kafka வின் கதைகளை முழுமையாக படித்து உணர வேண்டும் என்று  நிறைய இலக்கியவாதிகள் ஜெர்மன் கற்றார்கள். உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்த்தார்கள். ஐரோப்பிய பள்ளி, கல்லூரி பட திட்டங்களில் Kafka விற்கு நிரந்தர இடம் கொடுத்தார்கள்.

'மொழிகள் என்பதே ஒரு அசிங்கமான மொழிபெயர்ப்பின் மிச்சங்களே'  என்ற அவரது சிந்தனைகள் நிச்சயம் கவனிக்க தக்கவை.

உலகத்தரம் வாய்ந்ததாக, படித்தேயாக வேண்டியதாக கொண்டாடப்படும் Kafkaவின் சில படைப்புகள்:

1.  'The Trial' (விசாரணை)
2.  'The Metamorphosis (உருமாற்றம்)

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படித்துப்பாருங்கள். Kafkaவின் வித்யாசமான உலகம் உங்களை வரவேற்கும்...!

http://www.kafka-online.info/ (இங்கே Kafka வின் கதைகளை ஆங்கிலத்தில் படிக்கலாம்)

'இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா நம்பிக்கைகள் கொட்டிக் கிடக்கின்றன..ஆனால் அதில் எதுவும் நமக்கானவை அல்ல...!
- by Franz Kafka

************************************************************************

அடுத்த எழுத்தாளரை அலசும் முன்..!

கொஞ்சம் இடைவேளை ...!
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்


எல்லாம் கடந்து போகும்...!

என்ன செய்யலாம் ?

மூன்று பெண்கள்..அதுவும் இளமையின் வாசலில், கண்கள் கொள்ளா கனவுகளுடன்... நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி நகரும்போதே..நசுக்கப்பட்டு விட்டார்கள்...!

ஊடகங்கள் மூலமாக நமக்கு தெரிந்து வேதனைப்படவைத்தது இப்படி சிலபேர் மட்டுமே...தெரியாமல் கருகிப் போனவர்கள் இன்னும் நிறைய...!

வினோதினி: காதலை ஏற்க மறுத்ததால், அமிலம் வீசப்பட்டு பரிதாப சாவு 

வினுப்ரியா: காதலை ஏற்க மறுத்ததால், முகநூலில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, மனவுளைச்சலில் தற்கொலை.

ஸ்வாதி: (காரணம் இன்னும் தெரியவில்லை) பொது இடத்தில் வெட்டப்பட்டு கொடூர சாவு.

முன் இரண்டிற்காக தண்டிக்கப் பட்டவர்களும், பின் ஒன்றிற்காக தேடப்படுபவனும்...இளைஞர்கள்...!

எல்லோரையும் போல படித்துக்கொண்டோ, வேலை செய்துகொண்டோ, நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டோ, சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, சடுதியில் புத்தி தடுமாறிய இளைஞர்கள் ...!

என்ன செய்யலாம் ? இதை எப்படி தடுப்பது ?

மனோதத்துவ ஞானிகள், மருத்துவர்கள், சமூக நீதியாளர்கள் திரும்ப திரும்ப சொல்வதெல்லாம் ஒன்று தான்...!

யாதொன்றையும் முளையிலேயே விதைக்க வேண்டும்...!

புரியும் படி சொல்வதானால், இன்றைய இளைஞர்களை கட்டுப் படுத்தத் தவறிவிட்டோம். நாளைய இளைஞர்களான மாணவர்களிடம் விதைப்போம். வரும் காலமாவது நல்ல காலமாக இருக்கட்டும்.

சரி..என்ன விதைப்பது ? எப்படி விதைப்பது ?

இதையெல்லாம் நீண்ட நெடும்காலமாக ஆராய்ந்து, சோதித்துப் பார்த்து..செயல்படுத்தியும்  வருகிறன, உலகில் பல நாடுகள், நாம் தான் இன்னும் செயல்படுத்த தொடங்கவே இல்லை...!

1. அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, தேர்வுக்கு என்று இல்லாத ஒரு பொதுப்பாடம் (Generic Subject without Exam) 'குற்றமும், நீதியும் தண்டனையும்' (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)

2. இந்தப் பொதுப்பாடத்தை, பள்ளி ஆசிரியர்கள் மட்டும் இன்றி, நீதித்துறை மற்றும் காவல்துறை சார்ந்தவர்களும் மாணவர்களுக்கு கற்பிக்க வரைமுறை 

3. வருடத்திற்கு ஒரு முறை, சிறைச்சாலையையும் அதன் நடைமுறைகளையும் நேரில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளும் வழிமுறை.

4. இவையெல்லாம் சமூகக் குற்றங்களாகும், இதை செய்தால் இப்படிப்பட்ட தண்டனைகள் நிச்சயம் கிடைக்கும் என்று ஆழமாக பதிய வைத்தல்.

5. குற்றம் புரிந்து தண்டனை பெற்றவர்கள் வாழ்வும் நிலைமையும் விளக்கப் படங்களாக விவரித்தல்.

 இந்த 5 விஷயங்களை செயல்படுத்திதான், பல நாடுகள் இளம் குற்றவாளிகளின் விகிதாசாரத்தை குறைத்து வருகின்றன என்பது நிதர்சனம்.

இளம் வயதிலேயே, இதெல்லாம் கொடுமையான குற்றம், இதைச்செய்தால், நீ இப்படியெல்லாம்  நிச்சயமாக தண்டிக்கப்படுவாய்....உன் எதிர்காலமே சூனியமாகி விடும் என்று..திரும்ப..திரும்ப..திரும்ப..திரும்ப...சொல்லிக் கொடுக்க வேண்டும்...!

சரி..பள்ளிக்கே போகாதவர்களுக்கு ?...அட போங்க பாஸ்..பத்தாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி என்பது கட்டாயம் வேண்டும்.

நம்ம நாட்ல இதாங்க பெரிய பிரச்சனை...ஒரு ஓட்டையை அடைக்கப் போனா ஒன்பது ஓட்டை வெளிய தெரியுது..அந்த ஒவ்வொரு ஓட்டையும் இன்னொரு ஒன்பது ஓட்டையை வெளிக்காட்டுது...! இப்படி ஓட்டைகளாவே இருக்கு..அதுக்காக ஓட்டைகளை அடைக்காம விட்டுட முடியுமா..!

அடைச்சுதான் ஆகணும்..ஒண்ணொண்ணா...!

********************************************************************************
நல்லா கொடுக்கறாங்க டீடெயிலு...!

Loch Ness Monster னு ஒண்ணு கேள்வி பட்டிருக்கீங்களா ?

சுத்தத் தமிழ் படுத்திப்பார்த்தா இப்படி வருது: 'கடற்கழி நிலக்கூம்பு மிருகம்'

வேணாம் விட்றுங்க...! இது ஒரு வகை கடல் பிராணி..ஆனா கிட்டத்தட்ட டைனோசர் சைஸுக்கு பெருசு. பார்க்க கூட அப்படியே தான் இருக்குமாம்.

இது இருந்துச்சா....இருக்கா, இல்ல உட்டாலக்கடியானு நிறையவே ஆராய்ச்சிகள் நடந்தது..நடந்துகிட்டும் இருக்கு.



இதை..இங்கப் பார்த்தேன், அங்கப் பார்த்தேன்..selfie எடுத்துக்கிட்டேன்னு நெறைய பேர் சுத்திகிட்டு திரிஞ்சாலும்...ஏனோ அமெரிக்கர்கள் இது மேல ஒரு ஆர்வம் காட்டவே இல்ல...ஆனா பிரிட்டிஷ்காரங்க இதை இன்னும் கெட்டியா புடிச்சுகிட்டு ரொம்பவே விளையாடிகிட்டு இருக்காங்க....!

விஞ்ஞானப்பூர்வமான  விஷயம் இது தான்: இந்த கடல் டைனோசர்னு ஒண்ணு இப்ப பூமில உயிரோட இல்லை...சில லட்ஷம் வருஷங்களுக்கு முன்னால இருந்திருக்கலாம்...!

ஆனா நம்ம ஆளுங்க சும்மாவே இருக்க மாட்டாய்ங்களே..! அப்பப்ப ஏதாவது கிளறி விட்டு பீதியை கெளப்பறது தானே இவங்க வேலை ...!

ஸ்காட்லாந்துல ஒரு ஏரி கரை ஓரமா திடும்னு ஒரு நாள் இப்படி கெடந்துச்சு...!




பார்த்த உடனே 'உவ்வே' வர்ற மாதிரி இருக்குற இது தான் தூங்கிட்ருந்த நாட்டையே பரபரப்பாக்கிடுச்சு...!

dull அடிச்சுப் போன 'Loch Ness Monster' விஷயம் மறுபடி சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.

இது அது தானா , அது தானான்னு அங்கங்க அலற, கடுப்பான போலீஸ் வேகமா விசாரிச்சு...விஷயத்தை புஸ் ஆக்கிட்டாங்க...!

அது ஒரு ஒட்டகச்சிவிங்கியோட எலும்புகளாம்...! 'கடற்கழி நிலக்கூம்பு மிருகம் லாம் இல்லையாம்...! அடச்சே...!

அப்ப அந்த ஓட்டகச்சிவிங்கி ஏன் அங்க வந்து செத்துப்போச்சு...! இத்தனை நாளா, அந்த ஏரில படகு சவாரி செஞ்சவங்க யாருமே ஏன் அந்த ஓட்டகச்சிவிங்கியை பார்க்கவே இல்லை ?

விசாரிச்சதுல, எங்கயோ செத்துப் போன அதை இங்க கொண்டு வந்து போட்ருக்காங்களாம்...! யார்ரா செஞ்ச வேலை இது..?

அவங்களைத்தான் Scotland போலீஸ் தீவிரமா தேடிகிட்டு இருக்காங்களாம்..மவனே கைல கிடைச்சா காலி....!


*********************************************************************************

'கொடை இடையாள்'

 'கொடி  இடையாள்' ங்கறது அழகான பொண்ணுக்கு ஒரு இலக்கணமா நாம கேள்விப்பட்டிருக்கோம் , ஆனா இது என்ன கொடை இடையாள் ...?

'Bobby-Jo'ங்கற 43-வயசு பெண்மணி தான் அவங்க..அமெரிக்காவை சேர்ந்தவங்க...!

எட்டு அடியாம்...! என்னாது  இது எட்டு அடி ? வேற வொண்ணும் இல்லேங்க..இது அவங்க இடுப்போட சுற்றளவு..! அம்மாடி..எம்மாம் பெரிய இடை..!

இடைவெளியே இல்லாம அப்படி என்ன சாப்பிடங்களோ தெரியலை..இடை பெருத்துப்போச்சு...!

பெருத்த இடையும் பருத்த உடம்பும் அவங்கள வேலை வெட்டி செய்ய முடியாம ஆகிடுச்சு..ஆனாலும், பெருத்த இடைக்கு உள்ள, பசிச்ச வயிறு இருக்குங்களே ..என்ன பண்றது ?

அதுக்கு அவங்க தேர்தெடுத்த தொழில் தான்..மெர்சலான விஷயம்...!

'Modeling'

என்ன அவங்கள வெச்சு காமெடி கீமெடி ஏதாச்சும் பண்ணாங்களானு தானே கேக்கறீங்க..அதான் இல்லை..இப்ப அவங்க ஒரு பிரபலமான model, அதுக்கு காரணமே அந்த பெருத்த இடுப்பு தான்...!

என்ன மண்ட  காயுதா..? இந்த அமெரிக்கனுங்களே இப்படி தாங்க..கொஞ்சம் கிறுக்கு புடிச்சவங்க...! இது இப்படி தான் இருக்கணும்னு ஒரு இலக்கணம் வகுப்பாங்க...அந்த இலக்கணம் அதீதமா மீறப்படும்போது அதையும் கொண்டாடுங்க...!

அப்படித்தான் இந்த கொடை இடையாளும் ரொம்ப பிரபலமா ஆயிட்டாங்க...!



91 இன்ச்னா  சும்மாவா ? நான் தான் உலகத்துலயே பெரிய இடைக்காரினு இவங்க தம்பட்டம் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க..!



ஆனா பாருங்க..! விதி யாரை விட்டது..?

நீ அவ்ளோ பெரிய 'அப்பா டக்கரி' எல்லாம் இல்ல...! 2013லேயே 'Mikel Ruffinelli ங்கற அமெரிக்க கறுப்பின பெண் 99 இன்ச் பெருத்த இடையோட Guinness Records ல இடம் புடிச்சிட்டாங்கனு சொல்ல..

இதுக்கு மேல இடுப்பை பெருக்க முயற்சி பண்ணினா சங்கு தான்னு Doctors சொல்லிவிட அம்மணி இப்ப ரொம்ப feeling ல இருக்காங்களாம்..! ஐயோ ஐயோ...!

*********************************************************************************

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்