உலகின் தலை சிறந்த பத்து பொறியாளர்கள்: Part 2


மன்னிச்சு தோழர்களே...வேலை பளு காரணமாக இடைவெளி சற்று நீண்டு விட்டது SORRY...!


Part-1 இல், 10இல் இருந்து 6 வரை பார்த்தோம். மிச்ச மேதைகளை பார்ப்போமா...!

5. அலெக்ஸான்ட்ரியா (Alexandria):


'Aeolipile'  என்கிற ஜெட்-பொறி இயந்திரத்தை(Jet Steam Engine) இவர் கண்டுபிடித்த போது அதிகமில்லை...Gentle people....ஏசு கிறிஸ்து மறைந்து 50 வருடங்களே ஆகி இருந்தது. இவரும் ரோம ஆளுகைக்கு உட்பட்ட கிரேக்க நாட்டவர் தான். 

மிகச் சிறந்த ஆய்வாளர். ஆராய்ச்சியின் மூலம் எதையும் சாதிக்லாம் என்பதே இவர் கற்றுக் கொடுத்த கோட்பாடு. தானியங்கி சூத்திரத்தின் தந்தை (Father of Industrial Automation). 'அண்டா கா கஸம் அபு  கா ஹுக்கூம்' சொன்னாலும் இவர் இல்லாமல் ஸீஸெ திறந்திருக்காது. (Actually அது 'அண்டா'வா 'அல்லா'வா, எனக்கு படம் பார்க்கும்போது 'அண்டா'னு தான் கேட்டுச்சு...!)


காசு போட்டால் பொருள் கொடுக்கும் எந்திரத்தின் (Vending machine) மூளையும் இவர் தான்.  


தொழில்துறை புரட்சி தொடங்குவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே  அதற்கு வித்திட்டவர். இன்றைய 10ஆவது & 12ஆவது கணிதம் மற்றும் இயற்பியல் பாட புத்தகங்கள் முழுவதும் நிறைந்து இருப்பது பெரும்பாலும் இவரது கோட்பாடுகளே.


கிரேக்கம் கொடுத்த போறியாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு, ஏனெனில் அடிப்படையில் இவர் ஒரு ஆசிரியர். கற்றணைத்தூறிய அறிவை பகிர்ந்து கொண்டவர். பொதுவில் இவர் போன்ற ஆய்வாளர்ள் கண்டுபிடித்ததை மட்டுமே காட்சிப்பொருள் ஆக்குவர். ஆனால் இவரோ கண்டுபிடிப்பின் சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தவர். 


குறிப்பு 1: Hollywood திரைப்படங்கள் முதல் பாஹுபலி படம் வரை நாம் பார்த்த பல போர் ஆயுதங்களை வடிவமைத்தவர் இவரே. 'Belopoeica' என்கிற இவர் எழுதிய புத்தகத்தில் போர் ஆயுதங்களை பற்றி விரிவாகப் படிக்கலாம்.

குறிப்பு 2: உலகின் மிகச்சிறந்த அறிவியல் கருவூலமாக கருதப்படும் அலெக்ஸான்ட்ரியா-நூலகத்தில் (Library of Alexandria) தான் தன் வாழ்நாட்களை கழித்திருக்கிறார். இன்றும் அந்த நூலகத்தின் இருப்பிடத்தை கிரேக்கம் முழுவதும் அகழ்வாராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பு 3: ஆர்சிமெதஸை 7ஆம் இடத்திற்கு தள்ளி விட்டு இவர் 5ஆம் இடம் பிடித்ததற்கு காரணம் இவரின் கற்றுக் கொடுத்த பண்பே. (Teachers deserves better place than scientists)

குறிப்பு 4: இவர் வாழ்க்கை வரலாறு என்று எதும் நம்மிடம் இல்லை, இவரின் சில படைப்புகளை தவிர. இவர் இயர்-பெயர் கூட தெரியாது. அலெக்ஸான்ட்ரியா பல்கலைக்கழகத்தில் பணி ஆற்றியதால் அதே பெயரில் அறிப்படுகிறார் (The Hero of Alexandria).


4ஜேம்ஸ் வாட்  (James Watt):



அலெக்ஸான்ட்ரியா கண்டுபிடித்த இயந்திரத்தை (Steam Engine) நெறிப்படுத்தி முறைபடுத்திய வெள்ளைக்காரர் இந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேம்ஸ் வாட் எனும் கண்டுபிடிப்பாளர் (Inventor).

விரையமாகும் ஆற்றலை (Energy) மிகைப்படுத்தி சக்தியை (Power) செயல்திறனாக்கிய செயல் புயல். அதனாலேயே சக்தியை இவர் பெயர் கொண்டே அளக்கிறோம். (SI Unit of Power is 'Watt').

குதிரைத் திறன் கோட்பாடு (The Concept of Horse Power) இவர் கொடுத்தது தான். 


க்ளாஸ்கோ பல்கலைகழகத்தில் (University of Glasgow) முதலில் அனுமதி மறுக்கப்பட்டாலும்  பிறகு அங்கிருந்த கருவிகளை பழுதுபார்க்க இவரை விட்டால் ஆளில்லை என்ற சூழலில் கழகத்தில் நுழைந்தார். (இது நமக்கு சட்டுனு ஞாபகத்துக்கு வர்ற அந்த கழகம் இல்லீங்க இது வேற...!)  


ஆரம்பத்தில் எல்லாமே தோல்வி தான். ஆனால் சோர்ந்து போகாமல் (இசைக் கருவிகளும் பொம்மைகளும் தயாரித்து வயிற்றை கழுவி கொண்டே) முயற்சியை திருவினையாக்கியதால் தான் இவர் இன்று வரை நினைவில் இருக்கிறார்.


ஆண்டு கடுமையான உழைப்பின் வெளிப்பாடே 1775இல் இவர் கண்டு பிடித்த 'ஆற்றலை மிகைப்படுத்தி சக்தியை செயல்திறனாக்கும்' புதிய முறை. அதுவும் 5 மடங்கு அதிக திறன்அன்றைய காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொழில் புரட்சிக்கு வித்திட்டது. 

அடுத்த 6 ஆண்டுகள் இவர் கட்டியது எல்லாமே வெற்றிப் படிக்கட்டு தான். விலை குறைந்த அதிக ஆற்றல் கொண்ட யந்திரங்கள் சந்தைக்கு வந்து மனித உடல் ழைப்பை குறைத்தன.

18ஆம் நூற்றாண்டின் 'அப்துல்கலாம்' ஆக இவர் கொண்டாடப்பட்டார் எனக்கொள்ளலாம்.

குறிப்பு 1: பயனுள்ள பொருளாக மாற்ற முடியாத எந்த கோட்பாடும் வீணானது என்பதே இவர் கொள்கை. எனவே ஆராய்ச்சியின் முடிவு வெற்றி என்றால் மட்டுமே சமண்பாடுகளை எழுதி வைத்தார் (No documentation until success). 

குறிப்பு 2: இன்றைய பிரதி எடுக்கும் (Copy from Originals) தத்துவத்தை எளிதாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இவர் தான். இன்றும் நீர் சுத்திகரிப்புக்கு பயன்படும் 'க்ளொரின்' (Chlorine) அவர் கொடுத்துதே. 

குறிப்பு 3: நம்மவர்களின் அரும்பெரும் இரு குணங்களாபேரம் பேசுவதும் கொசுறு கேட்பதும் இவருக்கு சுத்தமாக பிடிக்காத விஷயங்கள்.  (அப்ப தமிழனுக்கு இவரு தான் மொத எதிரி...!)


3தாமஸ் ஆல்வா எடிஸன் (Thomas Alva Edison):



இவரை பற்றிய அறிமுகம் தேவை இல்லை. இன்றைய நவீன வாழ்க்கையின் இன்றியமையா தேவையான மின்சார வெளிச்த்தை கொடுத்தவர். வரலாற்றின் முழுமையான கண்டுபிடிப்பாளர் (The most prolific Inventor) என்றே கொண்டாடப்படுபவர். வெகுஜன உற்பத்தியின் புரட்சியாளர் இந்த அமெரிக்கர்.

1097 காப்புரிமைகளுக்கு சொந்தக்காரர் என்ற சாதனையாளர். இந்த தனி மனித சாதனை இதுவரை முறியடிக்கப்படவே இல்லை என்பதே போதும், வேறென்ன சொல்ல...!


ஒலிப்பதிவுக் கருவி(Phonograph), இயங்கு நிழற்பட கருவி (motion picture camera), யெக்ஸ்-ரே கருவி (x-ray machine), பேட்டெரி (Battery), இருவழி தந்தி முறை (two-way telegraphy), என இவரது கண்டுபிடிப்புகளை பட்டியலிட இந்த ஒரு பதிவு போதாது. மின்சாரத்தை கல்யாணம் செய்து கொண்டு இவர் பெற்றெடுத்த பிள்ளைகள் ஏராளம்.

பி. யூ சின்னப்பா முதல் வருங்கால ரசிகனின் விசிலுகாய் கனவு காணும் நாளைய நாயகர்கள் வரை எல்லோரும் இவருக்கு கடமைப்பட்டவர்களே. 

இவரது மிகப் பெரிய பேருக்கும் புகழுக்கும் வெற்றிக்கும் இன்ன பிற எல்லா ...க்குக்கும் ஒரே காரணம்...தேவைக்கு ஏற்ப கருவிகள் தயாரித்து அதை சரியான முறையில் சந்தைப்படுத்தியது தான். 

கூட்டு முயற்சியினால் மட்டுமே பெரிய சாதனைகளை செய்ய முடியும் என உணர்ந்து ஆராய்ச்சிக்கென மட்டுமாய் தொழிற்சாலைகள் அமைத்தார்  எடிசன். அதுவரை தனியாய் பிரிந்திருந்த பொறியாளர்கள், ஆய்வாளர்கள் எல்லோரும் ஒரு குடையின் கீழ் தங்கள் வேலைகளை தொடர்ந்தனர். அதனால் தான் இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் தொழிற்சாலையின் பெயரிலேயே வெளி வருகிறது.

அதற்கு பிறகு அவர் தொடங்கியது எல்லாமே தொழிற்சாலைகள் தான். அவருடைய திரைப்பட நிறுவனம் (Edison Film Studio) மட்டும் 1200 திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் புதிய கண்டுபிடிப்பு, புதிய நாடு, புதிய பட்டம் என்று தேனி போன்ற சுறுசுறுப்பான வாழ்க்கை இவருடையது (நம்ம டி.ஆர் போலன்னு வெச்சிக்கலாமா...!). பணம், பொருள், இன்பம் என்று எல்லாம் வென்று மிகச்சிறந்த மனிதராய் கொண்டாடப்பட்டார் இவர்.  

 எல்லாம் முடித்து நிறைவாக செத்தும் போனார். இவரது இறுதி மூச்சுக்காற்று ஒரு குடுவையில் நிரப்பட்டு இன்றும் அமெரிக்காவின் ஒரு பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. முகத்தின் அச்சும் எடுக்கப்பட்டது.

உலகத்தில் பெரும்பாலோருக்கு அறிமுகமான ஒரு பொறியாளர் (The most popular Engineer in the world) என்று இவரை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.

குறிப்பு 1: 'புரிந்து கொள்ளவே முடியாத குழப்பவாதி' என குற்றம் சாட்டப்பட்தால் 87 நாட்களில் இவரது பள்ளிக்காலம் முடிந்து போனது.  போதாக்குறைக்கு காது வேறு மந்தம். தாய் தான் இவரை முழுமையாக செதுக்கியவர்.

குறிப்பு 2: சிறுவயதில் தெருவோரங்களில் செய்தித்தாள் விற்று வாழ்க்கையை தொடங்கியவர், அனுபவ பாடம் மூலமே எல்லாம் கற்றார். கற்ற வித்தையை மொத்தமாய் இறக்கி 14 தொழிற்கூடங்கள் அமைத்தார். General Electric (GE) என்ற உலகப்புகழ் பெற்ற இன்றவும் இயங்கி கொண்டு ருக்கும நிறுவனமும் அதில் ஒன்று. (பெங்களூரில் இதற்கு பெரிய கிளை அலுவலகம் உண்டு).

தனி குறிப்பு: இந்த நிறுவனத்தின் 'Locomotive' பிரிவில் பணியாற்ற எனக்கு 2008இல் வாய்ப்பு வந்தது. ஆனால் அதிக சம்பளம் காட்டி L&T என்னை GEக்கு போக  விடாமல் தடுத்து விட்டது..! (இது இப்ப இங்க ரொம்ப தேவை ஹி...ஹி...!)

குறிப்பு 3: பள்ளிக்கூடத்திற்கே போகாத ஒருவனின் கண்டுபிடிப்பு (Phonograph) என்பது 1837இல் மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். அதனால் இவர் 'மெல்நோ பார்க்கின் மந்திரவாதி' (The Wizard of Menlo Park) என்று அழைக்கப்பட்டார்.

குறிப்பு 4: இவர் மின்சாரத்தை கண்டு பிடிக்கவில்லை. அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வித்தையை செயல் படுத்தினார். அதில் ஒன்று தான் ஒளிரும் விளக்குகள் (fluorescent bulb / Electric light bulb).

குறிப்பு 5: (சற்றே பெரிய குறிப்பு)


A historical picture of meeting of two greats ‘Sir. Thomas Alva Edison’ & ‘Dr. Henry James Ford.

“I guess you don’t know me..I made the car that you are driving…!”

“I guess you don’t know me either. I invented electric light bulb-- the one that lights the path for your car…!”


டிசனும் ஃபோர்டும் மிகச்சிறந்த நண்பர்கள். அருகருகே வாழ்ந்தவர்கள். 'Winter Estate' என்று புகழ் பெற்ற தோட்ட பங்களாவில் இவர்கள் இருவரும் தனியாக நாட்கணக்கில் பொழுதை போக்குவார்கள். ஆனால் பிற்பாடே அதன் பயன் வெளிவரும். 

கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும்முன் எடிசனின் நிறுவனத்தில் தான் ஃபோர்டு வேலை செய்தார். தன்னிடம் இருக்கும் 'தானியங்கி மோட்டார் வாகனம்' பற்றிய திட்டத்தை அவர் டிசனுடன் பகிர்ந்து கொண்டார். அவரை வாழ்த்தி பொருளுதவி செய்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யுமாறு அனுப்பி வைத்தார் டிசன். 16 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மிகப்பெரிய தொழில் அதிபர்களாக சந்தித்து கொண்டனர். அதன் பிறகு பிரியவே இல்லை.

மிகக்குறைந்த மதிப்பெண்களில் முதல் பத்து இடத்தை தவற விட்ட பொறியாளர்களில் ஃபோர்டு முதன்மையானவர் (11ஆவது இடத்துக்கு சொந்தக்காரர்).


ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரலாம்.

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

உலகின் தலை சிறந்த பத்து பொறியாளர்கள்: Part 1

நாம் வாழும் இந்த நவீன உலகத்தை செதுக்கியது பொறியாளர்களே...!

இன்று நமக்கு இன்றியமையாததான எல்லாமே என்றோ ஒரு நாள் ஒரு பொறியாளன் மூளையில் கருவாகி பின் உருவானது தான்...!

அவர்தம் உழைப்பைப் போற்றும் பொருட்டு உலக அறிவியல் ஆளர்களால் தலை சிறந்த பொறியாளர்களாக கருதப்படும் பத்து பொறியாளர்களை காண்போமா...!

10. நிகோலஸ் ஒட்டொ (Nicholas Otto):



18ஆம் நூற்றாண்டின் பொறியாளர்.  ஜெர்மனியை சேர்ந்த இவர் அடிப்படையில் தேயிலை விற்பனையாளர், தேவையின் நிமித்தம் பொறியாளர் ஆனார். 1876இல் இவர் கண்டு பிடித்த 'உள் எரியூட்டப்படும் என்ஜின்' (Four-stroke Internal Combustion Engine named as Otto Cycle Engine) தான் இன்று தரையில் ஓடும் பெரும்பாலான வாகனங்களுக்கு அடிப்படை. 
கண்டுபிடித்த உடனே அதை பொருத்தி ஒரு மோட்டார் வாகனம் செய்து அதன் மூலம் டீ, காஃபி & சர்க்கரை விற்றார்.




9.ஆலன் ட்யூரிங் (Alan Turing):



19ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து வெள்ளைக்காரர்.
கணிப்பொறியின் பெரும்பாலான கோட்பாடுகளை வகுத்தவர். இவர் உருவாக்கியது தான் கணிப்பொறியின் அடிப்படையான பைனரி கட்டுமானம்(Binary Architecture) என்பது.
இரண்டாம் உலகப் போரில் இவர் உடைத்த ஜெர்மன் எனிக்மா குறியீடுகள்(German Enigma Code) தான் ஹிட்லர் தோற்க காரணம். இல்லையேல் என்றோ ஹிட்லர் உலகை விழுங்கி இருப்பார். போருக்குப் பின் இவரது பங்களிப்பு என்பது கணிணித்துறைக்கு இன்றியமையாதது.
காட்சிப் பொருளாய் எதையும் கண்டு பிடிக்கா விட்டாலும் கணிணித்துறை மீது இவருக்கு இருந்த ஆளுமை காரணமாக கணிப்பொறி அறிவியலின் தந்தை என்று இன்றும் போற்றப்படுகிறார்.

குறிப்பு 1: இவர் ஒரு ஓரின சேர்க்கையாளர்

குறிப்பு 2:  இவரை மைய்யப்படுத்தி 2014இல் வெளியாகி சக்கை போடு போட்ட Hollywood திரைப்படம் 'The Imagination Game'.  முடிந்தால் ஒரு முறை பாருங்கள். இன்று நாம் பதிவு எழுதவும் / படிக்கவும் இவர் தானே மூலக்காரணம்.

8. மிகேல் கலாஷ்னிக்கோவ் (Mikhail Kalashnikov):


"எனது கண்டுபிடிப்பின் நோக்கம் தாய்நாட்டின் எல்லையை காப்பது மட்டுமே.  அதன் இன்றைய
பயன்பாட்டுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது. இவை அரசியல் வியாபாரத்தால் விளைந்தவை...!"
என்று இந்த 19ஆம் நூற்றாண்டின் ரஷ்ய ராணுவ வீரர் எத்தனை முறை சொன்னாலும் உலகம் இவரை இன்னும் திட்டிக்கொண்டே இருக்கிறது.

உலகிலேயே அதிக உயிர்களை காவு வாங்கியதாக இன்றுவரை கருதப்படும் AK-47 ரைஃபிள்(Rifle) தான் இவரது கண்டுபிடிப்பு. பல தொழில்நுட்பத்தை காப்பி அடித்து தயாரித்திருந்தாலும், அதன் எளிமையும் (cheap to handle & to manufacture), பயன்பாடும் (easy to use at any condition), தானியங்கிதனமும் (Fully Automatic) தான் இவரின் மேதாவிதனத்தை பாறைசாற்றுகின்றன. 60 ஆண்டுகள் கடந்தும் தயாரிப்பில் இருப்பது ஒரு வரலாற்று சாதனை.

குறிப்பு 1: இன்றைய சர்வதேச கள்ளச்சந்தையின் அதிமுக்கிய விற்பனைப் பொருள் இதுதான். விலை அதிகமில்லை Gentlemen...வெறும் $400 (கிட்டத்தட்ட 25,000 ரூபாய்) தான்.

குறிப்பு 2: 2013இல் 94ஆம் வயதில் மறைந்த போது, ரஷ்யா இவரை தேசிய சொத்தாக (National Treasure) அறிவித்தது.

7. ஆர்சிமெதஸ் சயிரகுசே(Archimedes Syracuse):


இவர் சற்று புராதனமானவர், கிரேக்க நாட்டவர், ஏசு பிறப்பதற்கு 287 (287 BC) ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த மணித மேதை. இவர் தொடாத துறையே இல்லை. கணிதம், இயற்பியல், வடிவியல், வான சாஸ்திரம் என்று எதனுள்ளும் இவரை அடைக்க முடியாது. 
இவர் கண்டு பிடித்ததாக சொல்லப்படும் நெம்புகோல்(Levers), கவண் (catapult),  உள்ளிழுத்தி (pulleys), போன்ற எதற்கும் தற்போது நம்மிடம் ஆதாரம் இல்லை எனினும், எவ்வளவு ஆழத்தில் இருந்தும் நீரை மேல் கொண்டுவரும் கருவி, கப்பலை கடல் மட்டத்தின் மேல் உயர்த்தும் கருவி, ஆழக்குழி வெட்டும் கருவி என இவரது கண்டு பிடிப்புகளை கிரேக்க எழுத்தாளர்கள் விரிவாக போற்றுகிறார்கள். 

கணிதத்தின் இன்றியமையாத பை(π) இவர் கொடுத்தது தான்.

ஒரு சிலர் இவரை கற்பனை குதிரை ஓட்டியவர் (லூசு) என்று சொன்னாலும் சந்தேகமே இல்லாமல் இன்றைய நவீன பொறியியலின் தொடக்கம் இவர் தான். 

குறிப்பு 1: அரசனின் ஒரு சந்தேகத்திற்கு விடை கண்ட உடனே 'யுரேகா' (கிரேக்க மொழியில் யுரேகா என்றால் கண்டு பிடித்து விட்டேன் என்று பொருள்) கத்திக் கொண்டே வீதியில் நிர்வாணமாக ஓடினாராம் (அதான் லூசுன்டாங்க போல...!)

குறிப்பு 2: கிரேக்கம் ரோம சாம்ராஜியத்தின் கீழ் இருந்த போது, வழி கேட்டதற்கு பதில் சொல்லாததால், இவர் ஒரு ரோமாபுரி வீரனால் அடித்தே கொல்லப்பட்டார்.

6. வில்‌பர் மற்றும் ஆர்‌வில் ரைட் (Wilbur and Orville Wright):


'இறக்கை இல்லாத மனிதன் பறக்க முடியாது' என்பதை டிஸெம்பர் 17, 1903 அன்று மாற்றிக்காட்டிய அமெரிக்க மேதைகள் இந்த அபூர்வ சகோதரர்கள்.

பொறியியல் துறையின் உச்சமாக (From moving machines to flying machines) கொண்டாடப்படும் இவர்களது கண்டுபிடிப்பு தான் வானூர்திப் பொறியியல் (Aeronautical Engineering). 

விமானியின்  கட்டளைக்கு இணங்கி இன்றும் விமானம் பறப்பதற்கு இவர்களின் மூன்று அச்சு கட்டுப்பாட்டு அமைப்பு (three axis control system) தான் காரணம். இறக்கை வடிவமைப்புக்கும் (Propeller design), காற்றியக்கவியலுக்கும் (Aerodynamics) இவர்களே அடிப்படை ஆதாரம்.

குறிப்பு 1: இவர்கள் பிறப்பால் அமெரிக்கர்கள் ஆனாலும், தந்தை இங்கிலாந்துகாரர்,  தாய் ஜெர்மனியர்.

குறிப்பு 2:  இவர்கள் பட்டதாரிகள் இல்லை. 1994ஆம் ஆண்டு வில்‌பர்க்கு அவரது 127ஆவது பிறந்த நாள் அன்று பட்டம் கொடுக்கப்பட்டது. (என்ன...வாங்கத்தான் அவர் உயிரோடில்லை)
****************************

Sorry Folks, ஏதோ விளையாட்டாக தொடங்கிய பதிவு இவ்வளவு நீளும் என்று எதிர்பார்க்க வில்லை. எனவே ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தொடரலாம்.

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்கியது யார்? Part 1

1. Project " ஆயா சுட்ட வடை"

"நீ சாமர்த்தா அம்மா ஊட்டும் சாப்பாட்டை சாப்பிடுவியாம், அப்புறம் அதோ வானத்துல தெரியுதே நம்ம ஆயா சுட்ட வடை, அதை அம்மா உனக்கு வாங்கித் தருவெனாம். இப்போ ஆ காட்டு"

அம்மா, ஆயா சுட்ட வடை ஏம்மா வெள்ளையா இருக்கு?

அது தயிர் வடை கண்ணா, அதான்...!

இது தமிழ்நாட்டு தாய்மார்கள் குழந்தைக்கு சோரூட்ட உபயோகிக்கும் ஒரு வழி. (இப்ப இல்லீங்க...ஒரு காலத்துல...!)

பாவம் குழந்தைகள், கடைசிவரை அவர்களுக்கு அந்த தயிர் வடை கிடைக்கவே இல்லை....!

உண்மையில் வேறு யாருக்கு கிடைத்தது அந்த தயிர் வடை ???

இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு பிறகு, உலகமே களைத்து துவண்டு போயிருந்த போதும், அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டும் இந்தியா பாகிஸ்தான் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தன.

யார் அடுத்த 'வல்லரசு விஜயகாந்த் ' என முட்டிக் கொண்டிருந்தன.

வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஒரு விதமான பனிப்போர் என்று வர்ணிக்கிறார்கள் (Some sort of Cold War). இந்த பனிப்போர் பல துறைகளில் நிகழ்ந்தது, அதில் மிக முக்கியமானது விண்வெளி ஆராய்ச்சி (Space Research).

இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு பல கோடி மில்லியன் டாலர்கள் முதலீடு மற்றும் செலவு செய்து ஆராய்ச்சியில் இறங்கின.(At initial state those research were happened for military purposes but later turned to a matter of prestige)

எனினும், நம் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் போல கண்மூடித்தனமாக பல கோடி செலவு செய்யும் முட்டாள்கள் அல்ல அவர்கள்...!

யார் கொடுத்த தைரியம் இது ? எந்த நம்பிக்கையில் இறங்கினார்கள் ?

பல ஆண்டுகள் படித்து,  ஆராய்ச்சி செய்து வந்த அறிவியல் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொடுத்த நம்பிக்கையில் என்று நீங்கள் நினைத்தால்....ஐயோ....ஐயோ....!

அவர்களுக்கு அந்த தைரியம் கொடுத்தவர் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler)

 ஆமாம். அவரே தான்....!

பனிப்போர் தொடங்கும் முன் சற்று பின்னோக்கி பார்த்தால், ஹிட்லரின் மேற்பார்வையில் ஜெர்மன் வல்லுநர்கள் மறைமுகமாக பல ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தார்கள். அதில் முதன்மையானது ராக்கெட் தொழில்நுட்பம் (Rocket Technology). 

சொல்லப்போனால், ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததே ஜெர்மனியர்கள் தான்...!

இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் இங்கிலாந்தை ராக்கெட்டுகளால் துளைத்து எடுத்தார். இறுதியில் நிலமை மாறி ஹிட்லர் வீழ்ந்த பின், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜெர்மனியின் உள்ளே புகுந்து முடிந்த வரை கொள்ளை அடித்து போயின. ரஷ்யா ராக்கெட் தொழில்நுட்பக் கோப்புகளை கொண்டு போக, அமெரிக்காவோ மிச்சம் இருந்த  ஜெர்மன் வல்லுநர்களை கொண்டு போனது.

நம்மூர் ஜோசியர்கள் நவ கிரகங்களின் நிலைகளை வைத்து இந்தியாவிற்கு விடுதலை எப்போது என ஆராய்ந்து கொண்டிருந்த அதே வேளையில் 1947இன் தொடக்கத்தில் தான் பனிப்போரின் இந்த முக்கியமான Project " ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்குவது யார்?" தொடங்கியது.

*************************

2. 'Americans Can't, Even our Bitches can'


ஜெர்மன் வல்லுநர்களை கொண்டு போனாலும், தேவையான கட்டமைப்பு இல்லாததால், உடனடியாக எதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே இருந்தது அமெரிக்கா. உள் கட்டமைப்பும் ஆராய்ச்சி கூடமும் கட்டவே அடுத்த பத்து வருடங்கள் போயின. எல்லாம் தயராகி அமெரிக்கா ஆராய்ச்சியை தொடங்கிய நேரம், ரஷ்யாவோ முதல் வெற்றியையே ருசித்து விட்டிருந்தது.

1957, பனிப்போரின் பத்தாம் ஆண்டு, அக்டோபர் நான்காம் நாள், ரஷ்யா ஸ்புட்நிக்-Iஐ பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தியது. 22 நாட்கள் உயிர் வாழ்ந்த ஸ்புட்நிக்-I தான் உலக  விண்வெளி ஆராய்ச்சியின் முதல் வெற்றி.

அமெரிக்கர்கள் காதில் புகை வர பார்த்துக்கொண்டிருந்த போதே, அதே ஆண்டு நவம்பரில் லூனா-Iஐ விண்ணில் ஏவியது ரஷ்யா. இம்முறை தனியாக அல்ல, 'லைக்கா' என்ற பெண் நாயுடன். பூமியில் இருந்து விண்வெளி போன முதல் உயிரினம் 'லைக்கா' தான்.

இங்கே தான் ஒரு சுவாரஸ்யம்....!

மூன்றே வாரத்தில் அந்த லைக்காவோடு அனுப்பிய ராக்கெட் வெடித்து சிதறியது பற்றி சிறிதும் கவலைப்படாமல் அமெரிக்காவை நக்கல் அடிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டது  ரஷ்யா. 'Bitch' என்ற ரஷ்ய வார்த்தைக்கு 'பெண் நாய்' என்று பொருள். ஆங்கிலத்தில் அதற்கு வேறு அர்த்தம். அதைக்கொண்டு அமெரிக்காவை செம்மையாக வெறுப்பேற்றியது ரஷ்யா.

அது தான் ' Americans can't, Even our Bitches can'.

அதோடு நின்று விடாமல் தொடர்ந்து அடித்தது ரஷ்யா. 1959 செப்டெம்பரில், கிளம்பிய லூனா-II, 36-மணிநேரம் பயணித்து முதன்முதலில் நிலவை நெருங்கியது. நிலவில் மோதி சாகுமுன் அது அனுப்பிய புகைபடங்கள் தான் மனிதன் நிலவை நெருங்கிப் பார்த்த தருணம்.(அதாங்க....நம்ம ஆயா சுட்ட வடை...!)

ஒரு மாத இடைவெளியில் போன லூனா-III, பூமியில் இருந்து காணமுடியாத நிலவின் மறுபுறத்தை புகைபடங்கள் எடுத்து காண்பித்தது.

ஐயோ பாவம்...அமெரிக்கர்களுக்கு காதில் ரத்தமே வந்தது.

**************************
INTERMISSION (இடைவேளை)

தொடர்ச்சி அடுத்த பதிவில்...! 

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

அதென்ன செங்கதிர்?

தோன்றியதை பதிவு செய்ய Blog தொடங்கியாயிற்று. என்ன தொடங்கினாலும் பெயர் வைக்க வேண்டும், வைத்த பெயருக்கு காரணம் இருக்க வேண்டும். 
காரணம் இன்றி காரியம் இல்லை..! 

செங்கதிர் என்று பெயர் சூட்டியாயிற்று.....என்ன காரணம்?

'ஞாலத்தின் மாணப் பெரிது' என்பது வள்ளுவன் வாக்கு. அந்த ஞாலத்திற்கே ஒளி கொடுப்பவன் ஆதவன். நீர் மட்டும் அல்ல...ஒளி இன்றியும் அமையாது உலகு. நீரும் காற்றும் உய்விக்க வந்ததெனில், ஒளி செய்விக்க வந்தது. உயிர் வாழ நீரும் காற்றும் வேண்டுமெனில் அறிவு பெற ஒளி வேண்டும். செங்கதிர் விசாலமான ஞானத்தின் விலாசம்..!

ஆகவே கற்கவும் கற்பிக்கவும் தலைப்படும் பொருட்டுக்கு செங்கதிர் என்ற பெயரே சாலச்சிறந்தாக பட்டது.பட்டதும் பெயர் வைத்தாகி விட்டது...!

அதென்ன செங்கதிரொடு 1996?

என் தந்தை வழி, தாய் வழி வந்த பரம்பரையில் இதுகாறும் முதன்முதலாய் ஒருவன் (நான்தான்...!) கல்லூரி படி தொட்ட ஆண்டு 1996...! (அதுவும் பொறியியல் கல்லூரி)

OK, Blog தொடங்கியாயிற்று, இனி என்ன செய்யலாம் ???

இனி இந்தச் செங்கதிர் உலகமெங்கும் ஞான ஒளி வீசும்...!

தெரிந்ததும் அறிந்ததும் என அனைத்தும் பகிரும்...!

தெரியாதன எல்லாம் தெரிந்து பகிரும்...!

எம்பணி சிறக்க உம்மருள் வேண்டும்
ஸ்ரீராம் சம்பத் குமார் 

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.'


அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே...!

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் 
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹெ...!

ஆன்றோருக்கும் சான்றோருக்கும் என் போன்றோருக்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கும் என் முதற்கண் பணிவான வணக்கம்...!

பொருளீட்டும் பொருட்டு பொறியியல் படித்து, படித்த நெறியில் பிழைத்து வரும் சிறியவன் நான். தமிழ் தேசம் கடந்து போய் பல காலம் ஆனாலும்       இச்சமூகம் மீது கொண்ட தாளாத காதலின் பால் இதுகாறும் பூட்டி வைத்திருந்த எனது சமூகத் தொண்டை இனி வரும் காலம் முதல் தடையராது தொடர வாழ்த்த வேண்டி வணங்குகிறேன்...!
தங்கள் நால்லாசியுடன்
ஸ்ரீராம் சம்பத் குமார்  

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே