இது தான்....இது தான்....இனி வருங்கால தமிழகம்....!

ஐந்து நாட்களை தாண்டி ஆறாவது நாளாக வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது நம் தமிழ் சமூகம், ஒட்டு மொத்த தமிழகத்தில்.........குறிப்பாக மெரினா கடற்கரையில்.....!

பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டியாவை இவை எல்லாம்:

1. உலக வரலாற்றில் இதுவரை கூடிய மிகப்பெரிய கூட்டத்தில் 'ஒழுக்கம்' என்பது 100% கடைபிடிக்கப்பட்டது இங்கு தான்..இங்கு மட்டும் தான்..!

2. பெண்கள்...இளம் பெண்கள்...தாய்மார்கள்..வக்கிரமான சீண்டல்கள் தொடுதல்கள் இல்லாமல் சுதந்திரமாக தமது உடன்பிறப்புகளோடு இருப்பது போல் உணர்ந்து, இருந்து போராடுவது...சத்தியமாக உலகத்தில் இதுதான் முதல் முறை...! (தமிழனாய் பிறந்த எல்லோரும் மார்தட்டி கொள்வோம் ) 
மெரினா கடற்கரையில் இளம் பெண்ணொருத்தி அமர இடமின்றி, அருகில் இருந்தவன் மடியில் அமர்கிறாள், அவனும் தன் மடி கொடுக்கிறான்..!...இருவருக்கும் இடையே தமிழுணர்வு கொடுத்தது சகோதர பாசம் மட்டுமே..அண்ணா உட்காரட்டுமா...தங்கச்சி உக்காரும்மா.....காமம் கடந்த பாசம், அது தான் தமிழினத்தின் பெருமை..பலம்...!

3. யார் கொடுத்தார்..யவர் கொடுத்தார்...என்ன கொடுத்தார்..எதற்காக கொடுத்தார்...அதெல்லாம் தெரியாது...தாகம் எனில் எங்கிருந்தோ தண்ணீர் வந்தது...பசி எனில் எங்கிருந்தோ உணவு வந்தது...மயக்கம் எனில் எங்கிருந்தோ மருந்து வந்தது...தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்ட ஒரே போராட்டக்களம் இது தான்...!

4. ஒட்டு மொத்த உலக வரலாற்றில் லட்சத்திற்கு மேல் கூடிய மக்கள் கூட்டத்தில்..இது வரை சாராய / சிகரெட் வாசனை வீசாத ஒரே போராட்டம் இது தான்...இது மட்டும் தான்....!

5. நூற்றுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் காட்சிகள் இருக்கும் இத்திருநாட்டில், எந்த கட்சியும் சாராத மக்கள் போராட்டம் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. (ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் திராவிட கட்சிகள் முன்னெடுத்தது, சுதந்திர போராட்டம் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தது )

6. காவல்துறை முழுமனதாக ஏற்று ஒத்துழைப்பு கொடுத்த ஒரே போராட்டம் இது தான் (நேற்று வரை அரசியல் கூத்தாடிகள் பேச்சை கேட்டு மக்களை தடியடித்த காவல் துறையை தான் இது வரை நாம் பார்த்திருக்கிறோம்). இனிமேலும் காவல்துறை ஏவல்துறைஆக இல்லாமல் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படும் என நம்புவோம் 

7. ஒட்டு மொத்த போராட்டக்காரர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது..உணர்வாக போராடுபவர் யார்...விளம்பரத்திற்காக போராடுபவர் யார் என்று...! உண்மையானவர் வரவேற்கப்பட்டார்...வேடதாரிகள் வெளியேற்றப்பட்டார்கள்...! (பிரபலமானவர்கள் பல பேர் பல்பு வாங்கி ஓடிப்போனார்கள்)

8. பொது மக்களுக்கு இடையூறு இல்லமால் நடக்கின்ற ஒரே புரட்சி போராட்டம் இது தான்...!

நமக்கு தெளிவாக தெரிகிறது...என்  தமிழ் சமூகம் விழித்துக்கொண்டு விட்டது...இனி இவர்களை ஏமாற்ற முடியாது...!

அரசியல் வியாபாரிகளே, பன்னாட்டு நரிகளே, இனி உங்கள் பருப்பு இங்கே வேகாது...! வேறு இடம் தேடி ஓடுங்கள்..!

என்  தாய் தமிழகம் நீடுதுயில் நீக்கி விழுதெழுந்து விட்டது...! இனி இது இளைஞர் யுகம்...அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் எம் தாய்திருநாட்டை வளமாக்குவதை...!

இப்போது விதைக்கப்பட்டிருப்பது விதை மட்டுமே...இனிமேல் தான் இருக்கிறது...உலகமே காத்திரு...! 


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்






எல்லாம் கடந்து போகும்..ஆனால் இது மட்டும் என்றும் நினைவில் நிற்கும்...!

"எங்கிருந்து தொடங்கியது இது? எப்படி இவ்வளவு பெரிய  கூட்டம் கூடியது ? நடிகனின் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதும் இளம் பெண்களை கிண்டல் செய்வதுமே கிளர்ச்சி என்று கிடந்த இளைஞர் சமூகம் எப்படி இப்படியொரு எழுச்சி கொண்டது? 

இத்தனை ஆண்டுகளாக குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்த தமிழ் கூட்டம், திடீரென்று எப்படி எழுந்து கொண்டது?

வீதிக்கு வந்தது இளைஞர் கூட்டம் தான் என்றால் அவர்களை தடுத்து வீட்டோடு வைத்திருக்க வேண்டிய பெற்றோரும் மற்றோரும்  சேர்ந்து அல்லவா வீதிக்கு வந்து போராடுகிறார்கள் ? இது என்னடா நம் அரசியல் வாழ்வுக்கு வந்த சோதனை?"

நாட்டுகாளைகள் பெருக்கக்கூடாதென்று ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டது தவறா ? பெரும் அக்கப்போராக இருக்கிறதே?

இன்று மத்திய மாநில அரசுகளின் அரசியல் தூண்களும் அதிகார தூண்களும் விடை காண முடியாமல் தவிக்கும் மிகப்பெரிய கேள்வி இது தான்.

இன்று நேற்றல்ல, காலம் காலமாக இன்று வரையில் டெல்லி கூட்டத்தை பொறுத்தவரை 'இட்லி வடை தின்னும் மதராஸிகள்' தாம் நாமெல்லாம். இதனை செவ்வனே அறுதியிட்டு உறுதிப்படுத்திவர்கள் தான் நாம் ஒட்டு போட்டு அனுப்பி வைத்த M.P கள்.

ஆனால் என்றாவது ஒரு நாள் மாற்றம் வரும், தமிழினம் துவண்டு ஏழும் என்ற என்போன்றோரின் பல்லாண்டு கனவு இன்று நினைவாகி இருக்கிறது.

நிச்சயம் இது ஒரு வரலாற்று சாதனை. எந்த அரசியல் பின்புலமும் இன்றி, கொடி, கட்சி கோஷம் இன்றி, தனி ஒரு தலைவன் இன்றி, அத்துணை பேர்களுமே தலைவனாய் தலைவியாய் புரட்சி செய்து கொண்டிருக்கிறது தமிழ் இளைஞர் சமூகம்...!

மங்காத தமிழ் என்று வெண் சங்காய் முழங்குகின்றது இளைய சமூகம்..! இந்த முறை சங்கு சத்தம் திக்கெட்டும் உரக்க ஒலிக்கின்றது....!

போராட்டத்தின் பலனை அனுபவிக்க துடித்த கொள்ளைக்கூட்டம் காணும்போதே விரட்டியடிக்கப்பட்டது. இதுகாறும் தமிழர்கள் தலையை நக்கி தின்ற நரிக்கூட்டம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இது தான் தொடக்கம்..! நாம் எதிர் பார்த்து காத்திருந்த தொடக்கம்..! இனி நம் தேவைக்கு நாமே போராடுவோம்..! உதவாத அரசியல் வாதிகளை ஒதுக்குவோம்...!

தமிழ் கலாச்சாரம் காக்க புறப்பட்ட இளைஞர் படையே...இத்தோடு ஒடுங்கி விடாதே..! இதை தொடக்கம் என்றே கொள் ...நீ நம் சமூகத்திற்காக சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய..! எழுந்த கனலை ஆற்றி விடாதே..! இன்னும் எரியவிடு....அதே நேரம் உன் கல்வியும் குடும்பமும், எல்லாவற்றையும் விட மிக முக்கியம்..! அதையும் நினைவில் கொள் ...!

படித்துக்கொண்டே போராடலாம் தப்பில்லை..! தட்ட தொடங்கி விட்டோம், இனி தட்டிக்கொண்டே இருப்போம்...! திறக்க வில்லை என்றால்  மட்டும் மீண்டும் வீதிக்கு வந்து போராடுவோம்..!

கேட்டதை செய்யவில்லை என்றால், இவர்கள் வீதிக்கு வருவார்கள் என்ற பயமே ஆண்டைகளை அசரவைக்கும்..நமக்கான வழியும் பிறக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம்..! இந்தியா மட்டுமல்ல உலகமே இனி தமிழினைத்தை வேறு மாதிரி பார்க்கும்...! 

அதற்கு வித்திட்ட அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த "நன்றி"


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்